சென்னை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தபிறகு பறக்கும் படையினர், நிலை கண்காணிப்பு குழு மற்றும் வருமான வரி துறையினர் வாகன சோதனை மற்றும் முக்கிய விஐபிக்களின் வீடுகளில் சோதனை நடத்தி வருகிறன்றனர். இந்த சோதனையில் கடந்த பிப்ரவரி 26ம் தேதியில் இருந்து நேற்று முன்தினம் (1ம் தேதி) வரை உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்து சென்ற பணம் மற்றும் பரிசு பொருட்கள் என மொத்தம் ரூ.406 கோடியே 78 லட்சம் கைப்பற்றப்பட்டுள்ளது.