×

எஸ்.என்.ஜே. மதுபான உரிமையாளர் வீட்டில் ஐடி ரெய்டு: முக்கிய ஆவணங்கள் கைப்பற்றியதாக தகவல்

சென்னை: எஸ்.என்.ஜே. மதுபான நிறுவன உரிமையாளர் ஜெயமுருகன் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பல கோடி பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரும் 6ம் தேதி நடக்கிறது. இதனால் அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் அரசியல் கட்சிக்கு நெருக்கமான நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் தொடர் சோதனை நடத்தி வருகின்றனர்.அந்த வகையில், சென்னை நந்தனத்தை தலைமையிடமாக கொண்டு எஸ்.என்.ஜே மதுபான நிறுவனம் இயங்கி வருகிறது.

இந்த நிறுவனம் தொழிலதிபர் ஜெயமுருகன் என்பவருக்கு சொந்தமானது. ஜெயமுருகன் சினிமா தயாரிப்பாளராகவும் உள்ளார்.  இவருக்கு சொந்தமான வீடு, மதுபான ஆலை, சினிமா தயாரிப்பு அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையில், கணக்கில் வராத பல கோடி ரூபாய் பணம் மற்றும் சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. நள்ளிரவு வரை நடந்த சோதனையில் கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் சொத்துகள் மதிப்பு குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.

Tags : SNJ , SNJ Alcohol ID raid on owner's home: Information that important documents have been seized
× RELATED SNJ மதுபான குழுமத்துக்கு சொந்தமான...