சென்னை: திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து சென்னையில் இன்றும், நாளையும் மு.க.ஸ்டாலின் சூறாவளி பிரசாரம் மேற்கொள்கிறார். வாக்காளர்கள் மத்தியில் சிறப்புரையாற்றுகிறார். தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தேர்தல் வருகிற 6ம் தேதி நடைபெறுகிறது. தேர்தலுக்கான பிரசாரம் நாளை மாலை 7 மணிக்கு முடிவடைகிறது. தேர்தல் பிரசாரத்துக்கும் இன்றும், நாளை மட்டுமே எஞ்சியுள்ளதால் தலைவர்கள் இறுதிக்கட்ட பிரசாரத்தில் தீவிரமாக இறங்கியுள்ளனர். தலைவர்கள் தொகுதிகளில் முற்றுகையிட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதே போல் வேட்பாளர்களும் வீடு, வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டார்.
இந்த நிலையில் மு.க.ஸ்டாலின் இன்றும், நாளையும் சென்னையில் பிரசாரத்தில் ஈடுபடுகிறார். இது தொடர்பாக திமுக தலைமை கழகம் வெளியிட்ட அறிவிப்பு: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை 5.30 மணியளவில் சோழிங்கநல்லூர் தொகுதி திமுக வேட்பாளர் அரவிந்த் ரமேஷ்சை ஆதரித்து சோழிங்கநல்லூர் சிக்னல் அருகில் பிரசாரத்தில் ஈடுபடுகிறார். தொடர்ந்து மாலை 6 மணி வேளச்சேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அசன் மவுலானாவை ஆதரித்து திருவான்மியூர் வடக்கு மாட வீதியிலும், இரவு 7 மணியளவில் மதுரவாயல் தொகுதி திமுக வேட்பாளர் காரப்பாக்கம் கணபதியை ஆதரித்து போரூர் சிக்னல் அருகிலும், இரவு 7.30 மணியளவில் விருகம்பாக்கம் தொகுதி திமுக வேட்பாளர் ஏ.எம்.வி.பிரபாகர்ராஜாவை ஆதரித்து சாலிகிராமம் தசரதபுரத்திலும் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.
இரவு 8 மணி தியாகராய நகர் தொகுதி திமுக ேவட்பாளர் ஜெ.கருணாநிதியை ஆதரித்து காமராஜர் காலனி, கோடம்பாக்கத்திலும், இரவு 8.30 மணி ஆயிரம் விளக்கு தொகுதி திமுக வேட்பாளர் டாக்டர் எழிலனை ஆதரித்து நமச்சிவாயபுரம், லயோலா கல்லூரி மேம்பாலம் அருகிலும், இரவு 9 மணி ஆயிரம் விளக்கு டிரைவர்ஸ் காலனி தேனாம்பேட்டையிலும் மு.க.ஸ்டாலின் பிரசாரத்தில் ஈடுபடுகிறார். 4ம் தேதி(நாளை) காலை 9 மணி சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி திமுக வேட்பாளர் உதயநிதி ஸ்டாலினை ஆதரித்து ஐஸ் அவுஸ் காவல் நிலையம் அருகிலும், காலை 9.30 மணி சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதி வேட்பாளர் உதயநிதி ஸ்டாலினை ஆதரித்து சிந்தாதிரிபேட்டை மார்க்கெட் அருகிலும் மு.க.ஸ்டாலின் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.
காலை 10 மணி துறைமுகம் தொகுதி திமுக வேட்பாளர் பி.கே.சேகர்பாபுவை ஆதரித்து சௌகார்பேட்டை-தங்கசாலை தெரு(மகாசக்தி ஓட்டல்), காலை 11.00 மணி ஆர்.கே.நகர் தொகுதி திமுக வேட்பாளர் ஐட்ரீம்ஸ் மூர்த்தியை ஆதரித்து-எச்-6 காவல் நிலையம் அருகிலும், காலை 11.30 மணி பெரம்பூர் ெதாகுதி திமுக வேட்பாளர் ஆர்.டி.சேகரை ஆதரித்து எம்.ஆர்.நகர் (சீலம் பேக்கரி அருகில்), நண்பகல் 12 மணி மாதவரம் தொகுதி திமுக வேட்பாளர் மாதவரம் சுதர்சனத்தை ஆதரித்து பஜார் ரோடு, மாதவரத்திலும், மதியம் 3 மணி அண்ணா நகர் தொகுதி திமுக வேட்பாளர் எம்.கே.மோகனை ஆதரித்து புல்லா ரெட்டி அவென்யூ, அண்ணா நகரிலும், மதியம் 3.30 மணி வில்லிவாக்கம் தொகுதி திமுக வேட்பாளர் அ.வெற்றி அழகனை ஆதரித்து - கே.எச்.ரோடு,
நூர் ஓட்டல் அருகில், அயனாவரத்திலும், மாலை 4 மணி எழும்பூர் தொகுதி திமுக வேட்பாளர் இ.பரந்தாமனை ஆதரித்து தானா தெரு, புரசைவாக்கத்திலும், மாலை 5 மணி திரு.வி.க.நகர் திமுக வேட்பாளர் தாயகம் கவியை ஆதரித்து டிகாஸ்டர் ரோடு, ஆட்டுதொட்டி அருகில், புளியந்தோப்பிலும் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்கிறார். இவ்வாறு அதில் கூறப்படுகிறது.நாளை மாலை 5.30 மணி தான் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் வீடு, வீடாக சென்று பிரசாரத்தில் ஈடுபடுகிறார். பெரவள்ளூர் சதுக்கம், அகரத்தில் மு.க.ஸ்டாலின் வாக்காளர் மத்தியில் பிரசாரம் செய்கிறார். அங்கேயே தனது தேர்தல் பிரசாரத்தை நிறைவு செய்கிறார்.