×

தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுக்கு பிறகு இந்தியாவில் பாஜ கூட்டத்தை எதிர்க்கும் அணிக்கு ஸ்டாலின் தலைமை தாங்குவார்: வைகோ பேச்சு

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் சாத்தூர் ராமச்சந்திரனை ஆதரித்து அருப்புக்கோட்டை மரக்கடை பேருந்து நிறுத்தத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எம்பி பேசியதாவது: தமிழகத்தில் படித்த இளைஞர்கள் 90 லட்சம் பேர் வேலை இல்லாமல் இருக்கிறார்கள். 1 லட்சம் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. இதன்காரணமாக 5 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர். ஆனால் இந்த அரசு கொள்ளையடிப்பதை தொழிலாகவும், குறிக்கோளாகவும் கொண்டுள்ளது.

அதன் விளைவாகத்தான் திமுக தலைவர் ஸ்டாலின் கவர்னரிடம் மனு கொடுத்தார். ஆனால் இந்த மனுக்கள் மீது விசாரணை செய்யாமல் கவர்னர் குப்பைத்தொட்டியில் போட்டிருக்கலாம். ஆனால் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிந்து ஸ்டாலின் முதல்வரானதும் அதிமுக அமைச்சர்கள் ஜெயிலுக்கு போவது உறுதி. பெயில்கூட கிடைக்காது, ஊழல் அதிமுக அரசு தமிழகத்தின் உரிமைகள் எல்லாவற்றையும் காவு கொடுத்துவிட்டது. மத்தியில் இருக்கிற அரசு இந்தியாவுக்கே விரோதமான அரசாக உள்ளது. ஊழல் செய்த காரணத்தினால்தான் மத்திய அரசு காலடியில் அதிமுக அரசு கிடக்கிறது. தேர்தல் முடிவுக்கு பிறகு இந்தியாவில் பாஜ கூட்டத்தை எதிர்க்கிற அணிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் தலைமை தாங்குவார். மோடி, அமித்ஷா தலைமையில் உள்ள கூட்டத்தை எதிர்த்து ஸ்டாலின் தலைமையில் உருவாகிற அணி வலுவானதாக இருக்கும்.

Tags : Stalin ,BJP ,India ,Tamil Nadu ,Vaiko , Tamilnadu election, Vaiko, speech
× RELATED நாடு காக்க; நாளைய தலைமுறை காக்க;...