×

அதிமுக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்: ராயபுரம் திமுக வேட்பாளர் ஐட்ரீம்ஸ் மூர்த்தி பேச்சு

தண்டையார்பேட்டை: ராயபுரம் திமுக வேட்பாளர் ஐட்ரீம்ஸ் மூர்த்தி,  வீதி வீதியாக சென்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குசேகரித்தார். அப்போது அவர் பேசுகையில்,“தமிழகத்தில் அதிமுக  ஆட்சிக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். அதற்கு அச்சாரமாக ராயபுரத்தில் எனக்கு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களியுங்கள். நான் இதே தொகுதியில் வசிப்பவன். உங்கள் பிரச்னைகளை எப்போது வேண்டுமானாலும் தெரிவிக்கலாம்.

உடனடியாக சரிசெய்து கொடுப்பேன். இப்பகுதியில் குடிநீர் குழாய்களில் தண்ணீர் வர ஏற்பாடு செய்வேன். கழிவுநீர் பிரச்னை சரிசெய்யப்படும். சாலையில் தேங்கிகிடக்கும் குப்பை உடனுக்குடன் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார். வாக்கு சேகரிப்பின்போது, ராயபுரம் தொகுதி பொறுப்பாளர் கவிஞர் காசி முத்து மாணிக்கம், மாவட்ட பொறுப்பாளர் இளைய அருணா, பகுதி செயலாளர்கள் சுரேஷ் செந்தில் மற்றும் திமுக, கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

Tags : AIADMK ,Rayapuram ,DMK ,Idreams Murthy , AIADMK, end, DMK candidate, speech
× RELATED சென்னை ராயபுரத்தில் பாதுகாப்பு கருதி...