×

ஆலந்தூரில் சுரங்கப்பாதை பணியை விரைந்து முடிப்பேன்: எஸ்டிபிஐ வேட்பாளர் முகமது தமீம் அன்சாரி வாக்குறுதி

சென்னை: சென்னை ஆலந்தூர் தொகுதியில் அமமுக கூட்டணியில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் எம்.முகமது தமீம் அன்சாரி போட்டியிடுகிறார். இவர் தனது தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வீதி,வீதியாக சென்று குக்கர் சின்னத்துக்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திரண்டிருந்த பொதுமக்கள் மத்தியில் வேட்பாளர் முகமது தமீம் அன்சாரி பேசுகையில்,“ஆலந்தூர் தொகுதில் 10 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள ஆலந்தூர்-ஆதம்பாக்கம் ரயில் தண்டவாளத்தை கடக்கும் சுரங்கப்பாதை. ஆலந்தூர்-கிண்டி பச்சையம்மன் கோயில் இடையிலான ரெயில் தண்டவாளத்தை கடக்கும் சுரங்கப்பாதை, பழவந்தாங்கல்-மீனம்பாக்கம் இடையிலான ரயில்வே தண்டவாளத்தை கடக்கும் சுரங்கப்பாதை உள்ளிட்ட திட்டப்பணிகளை விரைந்து முடிக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுப்பேன்.

அதேபோல் ஆலந்தூர்-வேளச்சேரி உள்வட்டச் சாலையில் தில்லை கங்கா நகர் சுரங்கப்பாதையில் மேம்பாலம் அமைக்கப்பட வேண்டும் என்ற பொதுமக்களின் பல்லாண்டு கோரிக்கையையும் நிறைவேற்றுவேன். ஆலந்தூரை தூய்மையான நகராக மாற்ற நடவடிக்கை எடுப்பேன்” என்றார். பிரசாரத்தின் போது எஸ்.டி.பி.ஐ., அமமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் குக்கர் சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

Tags : Alandur ,STBI ,Mohammed Tamim Ansari , Alandur constituency
× RELATED ஏழைகளின் சின்னம் ‘மைக்’கா? நாதக வேட்பாளரை கலாய்த்த பெண்கள்