சென்னை: அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கான தேடல் குழுவில் டெல்லி ஜே.என்.யூ. பல்கலைக்கழக துணைவேந்தராக நியமிப்பதா என கி.வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார். டெல்லி ஜே.என்.யூ. பல்கலைக்கழக துணைவேந்தரை ஆளுநர் நியமனம் செய்தமைக்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார். மாநில அரசின் துணைவேந்தர் நியமனம் உரிமையை தமிழக ஆளுநரிடம் பறிகொடுத்த அடிமைகள் ஆட்சி எடப்பாடி ஆட்சி என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.