சென்னை: ஸ்டாலின் மகள், திமுக வேட்பாளர் வீடுகளில் ரெய்டு நடத்துவது பாஜக அரசின் பழிவாங்கும் செயல் என திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார். தேர்தல் ஆதாயமடைய விதிகளை மீறி பாஜகவால் வருமானவரித்துறை பயன்படுத்தப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த விதிமீறலை தேர்தல் ஆணையம் உடனே தடுத்து நிறுத்த வேண்டும். ரெய்டு மூலம் திமுகவின் கடைக்கோடி தொண்டனும் அஞ்சமாட்டேன், அடிபணியவும் மாட்டான் என டி.ஆர்.பாலு குறிப்பிட்டார்.