×

விண்ணப்பித்தவுடன் அனைத்து சான்றிதழ்களும் கிடைக்க நடவடிக்கை: காங். வேட்பாளர் அசன் மவுலானா வாக்குறுதி

சென்னை: வேளச்சேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அசன் மவுலானா, தொகுதி முழுவதும் வீடு வீடாக நடந்தே சென்று கை சின்னத்துக்கு வாக்கு கேட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது மக்கள் மத்தியில் அவர் பேசுகையில், ‘‘வட்டாட்சியர் அலுவலகம் மூலம் மக்களின் அத்தியாவசிய தேவைகளான பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள், சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ் மற்றும் இருப்பிட சான்றிதழ்கள் உள்ளிட்ட ஏனைய ஆவணங்கள் விண்ணப்பித்த உடனே கிடைக்க நடவடிக்கை எடுப்பேன்.

இதற்காக மக்கள் இனி அலைய வேண்டாம். அந்த பிரச்னை இனி உங்களுக்கு வராது. மின்சார விநியோகம் ஏற்ற இறக்கங்கள் இன்றி சீரமைக்கப்படும் என உறுதியளிக்கிறேன்’’ என்றார். பிரசாரத்தில், திமுக பகுதி செயலாளர் சு.சேகர், பாரதிதாசன், வேளச்சேரி எஸ்.பாஸ்கரன், ஆனந்தம், சாரதி, சீத்தாபதி, கோபால கிருஷ்ணன், ஆனந்த ஜோதி, பாண்டியன், முருகன், சக்திவேல், ரமேஷ், அரசு, செந்தில்நாதன், நாகராஜ், ஆறுமுகம், பிரேம் கிஷோர், கண்ணன், செல்வமணி, மனோஜ் குமார், மணிகண்டன், செல்வம், பிரபு, க.சரவணன், ராஜா. சரவணன், கணேசன் மற்றும் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மதிமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் ஏராளமானோர் அவருடன் சென்று கை சின்னத்துக்கு ஆதரவு திரட்டினர்.


Tags : Asan Maulana , Congress, Promise
× RELATED புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும்: அசன் மவுலானா வாக்குறுதி