சென்னை: சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் மின்தடை ஏற்படுத்தி அதிமுகவினர் பணப்பட்டுவாடா செய்வதாக திமுகவினர் புகார் தெரிவித்துள்ளனர். நள்ளிரவில் மின்தடையை ஏற்படுத்தி அதிமுக பணப்பட்டுவாடா என்று திமுக பகுதி செயலாளர் வாசு புகார் தெரிவித்துள்ளார். பணப்பட்டுவாடா குறித்து அயனாவரம் காவல் நிலையத்தில் வாசு புகார் அளித்துள்ளார். அதிமுகவினர் பணப்பட்டுவாடா செய்யும் போது திமுகவினர் கையும் களவுமாக பிடித்தனர்.