×

தேர்தல் நெருங்கும் வேளையில் ஐ.டி. சோதனை நடப்பது உள்நோக்கம் கொண்டது!: ஆர்.எஸ்.பாரதி கண்டனம்

சென்னை: தேர்தல் நெருங்கும் வேளையில் ஐ.டி. சோதனை நடப்பது உள்நோக்கம் கொண்டது என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கண்டனம் தெரிவித்துள்ளனர். நெருக்கடி நிலையையே சந்தித்த இயக்கம் திமுக. இதுபோன்ற சோதனைகளுக்கு எல்லாம் திமுக தொண்டர்கள் பயப்படமாட்டார்கள். அதிமுக அமைச்சர்கள் மீது ஆளுநரிடம் நேரில் ஊழல் புகார் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன் என கேள்வி எழுப்பிய அவர், கடந்த தேர்தலில் கண்டெய்னர் லாரியில் ரூபாய் 570 கோடி பிடிபட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம்சாட்டினார்.


Tags : R. S. Bharati , Election, IT. Testing, Motivation, RS Bharathi
× RELATED மின்னணு வாக்கு இந்திரங்கள் மீதான...