×

மீண்டும் மீண்டும் 2020-ஐ நினைவூட்டும் கொரோனா: இந்தியாவில் ஒரே நாளில் 81,466 பேர் பாதிப்பு: 469 பேர் பலி..! மத்திய சுகாதாரத்துறை அறிக்கை

டெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1.63 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 1.22 கோடியை  தாண்டியது. இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

* புதிதாக 81,466 பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,23,03,131 ஆக உயர்ந்தது.

* புதிதாக 469 பேர் இறந்துள்ளனர். இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,63,396 ஆக உயர்ந்தது.

* தொற்றில் இருந்து ஒரே நாளில் 50,356 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,15,25,039 ஆக உயர்ந்துள்ளது.

* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 6,14,696 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

* இந்தியாவில் குணமடைந்தோர் விகிதம் 93.89% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.33% ஆக அதிகரித்துள்ளது.

* சிகிச்சை பெறுவோர் விகிதம் 4.78% ஆக அதிகரித்துள்ளது.

* இதுவரை இந்தியாவில்  6,87,89,138 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 36,71,242 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.


Tags : Corona ,India ,Department of , Corona reminiscent of 2020 again: 81,466 victims in one day in India: 469 killed ..! Federal Department of Health Report
× RELATED கரூர் நகரப்பகுதியில் கால்சியம்,...