×

பொழிச்சலூரை பேரூராட்சியாக மாற்றுவேன்: இ.கருணாநிதி வாக்குறுதி

தாம்பரம்: பல்லாவரம் தொகுதி திமுக வேட்பாளர் இ.கருணாநிதி நேற்று பொழிச்சலூர் பகுதியில் வீதி வீதியாக நடந்து சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, மக்கள் மத்தியில் அவர் பேசுகையில், ‘பொழிச்சலூர் ஊராட்சி விமான நிலையத்தின் அருகிலேயே உள்ளது. ஆனாலும்,  இங்கு போதிய வருமானம் இல்லாததால் சாலை, குடிநீர் வசதிகள் எதுவும் இல்லை. 40 ஆண்டு காலமாக மிகவும் பின்தங்கிய பகுதியாகவே இருந்தது. நான் சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பேற்றவுடன் மாவட்ட ஆட்சியரிடம் சிறப்பு நிதியை பெற்று இந்த பகுதிகளில் புதிய தார் சாலைகள், சிமென்ட் சாலைகள், மழைநீர் கால்வாய்கள், நீர்த்தேக்க தொட்டிகள் மற்றும் எனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து சிறு மின்விசை நீர்த்தேக்க தொட்டிகள், குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்தேன்.

அதன்மூலம் 40 ஆண்டுகளாக பின்தங்கியிருந்த பகுதியை 5 ஆண்டுகளில் வளர்ச்சி அடைய செய்துள்ளேன். வருகின்ற சட்டமன்றத் தேர்தலில், நான் வெற்றி பெற்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக ஆட்சி அமைந்தவுடன், பொழிச்சலூர் ஊராட்சியை பேரூராட்சியாக மாற்றுவதோடு, மக்கள் குறைகளை தீர்ப்பேன்,’ என்றார். அப்போது அப்பகுதி பொதுமக்கள், ‘‘கொரோனா காலத்தில் எங்கள் பகுதிக்கு நேரில் வந்து நிவாரண உதவி அளித்த ஒரே நபர் நீங்கள் மட்டும்தான். எனவே உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து நிச்சயம் உங்களை வெற்றி பெறச் செய்வோம்’ என்றனர். பிரசாரத்தின் போது திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை சேர்ந்த ஏராளமானோர் உடனிருந்தனர்.

Tags : Pozhichalur ,E. Karunanidhi , I will turn Pozhichalur into a municipality: E. Karunanidhi promises
× RELATED 30 ஆண்டுகளாக தனியார் வசம் இருந்த...