×

மேற்கு தாம்பரம் மாந்தோப்பு பகுதியில் கரிகாலன் வாக்கு சேகரிப்பு

தாம்பரம்: தாம்பரம் தொகுதி அமமுக வேட்பாளர் கரிகாலன் நேற்று மேற்கு தாம்பரம், மாந்தோப்பு பகுதியில் மறைந்த முன்னாள் தாம்பரம் நகர மன்ற துணை தலைவரும், நகர செயலாளருமான ராதா இல்லத்தில், அவரது படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்திவிட்டு, நகராட்சிக்கு உட்பட்ட 33, 35, 36 ஆகிய வார்டுகளில் வீதி வீதியாக நடந்து சென்று வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது: நான் தாம்பரம் நகர மன்ற தலைவராக இருந்த 5 ஆண்டுகளில் தாம்பரம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 965 சாலைகள் அமைத்துள்ளேன். 8500 சாலையோர மின்விளக்குகளை எல்இடி விளக்குகளாக மாற்றியுள்ளேன். தெருவுக்கு இரண்டு சின்டெக்ஸ் தொட்டி என வைத்து தண்ணீர் பஞ்சத்தை போக்கி உள்ளேன். கன்னடபாளையம் பகுதியில் உள்ள குப்பை கிடங்கை அகற்றுவேன் என உறுதியளித்து அதற்கான பணியை செய்து உள்ளேன்.

தற்போது தாம்பரம் சட்டமன்ற வேட்பாளராக வெற்றி பெற்றால், தாம்பரம் தொகுதியை ஒரு முன்மாதிரியான தொகுதியாக மாற்றுவதுடன், தாம்பரம் நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்த முயற்சி எடுப்பேன். எனவே, குக்கர் சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெற செய்ய வேண்டும், என்றார். அமமுக செய்தி தொடர்பாளர் தாம்பரம் நாராயணன், நகர செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, அருள் கென்னடி, டி.ஆர்.பாபு, முன்னாள் கவுன்சிலர் மல்லிகா ராஜேந்திரன், எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர் செல்லப்பன், கோமளா, சேகர், கார்த்திகேயன், கோபால், தேமுதிக தாம்பரம் நகர செயலாளர் செழியன், நகர துணை செயலாளர்கள் சதீஷ், ஞானப்பால், மாலதி, மாவட்ட பிரதிநிதிகள் ரவிக்குமார், டி.சரவணன், அபயம் ஜெயகாந்தன் உட்பட அமமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளை சேர்ந்த ஏராளமானோர் உடனிருந்தனர்.

Tags : West Tambaram Manthoppu , Charcoal ballot collection in West Tambaram Manthoppu area
× RELATED வாக்காளர் பட்டியலில் பெயர்கள்...