×

ஜனாதிபதி கோவிந்த் தகவல் குணமாகி வருகிறேன் அனைவருக்கும் நன்றி

புதுடெல்லி: இருதய கோளாறு காரணமாக, கடந்த மார்ச் 26ம் தேதி டெல்லியில் உள்ள ராணுவ ஆராய்ச்சி மருத்துவமனையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இருதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டி இருப்பதாக கூறிய ராணுவ மருத்துவமனை நிர்வாகம், மேல் சிகிச்சைக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அவரை மாற்றியது. இதைத் தொடர்ந்து, எய்ம்சில் சேர்க்கப்பட்ட அவருக்கு, கடந்த செவ்வாய்க் கிழமை இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்ததாக மருத்துவர்கள் அறிவித்ததை தொடர்ந்து, ஜனாதிபதி டிவிட்டரில் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். ‘அறுவை சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்து வருகிறேன். சிறப்பான சிகிச்சை வழங்கிய மருத்துவர்களுக்கும், அர்ப்பணிப்போடு பார்த்துக் கொண்ட நலம் விரும்பிகளுக்கும் நன்றி. விரைந்து குணமாக வேண்டும் என்று நாடு கடந்து வாழ்த்து கூறிய அனைத்து தலைவர்கள், குடிமக்களுக்கும் நன்றி. என் நன்றியுணர்வை வார்த்தைகளில் வெளிப்படுத்துவது கடினமாக உள்ளது,’ என்று ஜனாதிபதி மாளிகையின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பதிவில் கோவிந்த் தெரிவித்துள்ளார்.

Tags : President Govind , President Govind Information I am recovering Thank you all
× RELATED 76வது பிறந்தநாள் விழா ஜனாதிபதி கோவிந்துக்கு தலைவர்கள் வாழ்த்து