பல்லாவரம் தொகுதிக்கு உட்பட்ட திருநீர்மலை பகுதிகளில் பலதரப்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு பேரூராட்சி நிர்வாகத்தால் வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல், திருமங்கையாழ்வார்புரம் பகுதியில் கடந்த பல ஆண்டுகளாக சாலைகள் சேதமடைந்து, பொதுமக்கள் பயணிக்க லாயக்கற்ற நிலையில் காணப்படுகிறது. அதே போல் தெருவிளக்குகள் பெரும்பாலானவை எரிவதே கிடையாது. கடந்த 2016ல் வர்தா புயலின் போது, சேதமடைந்த மின்கம்பங்கள் பல, தற்போது வரை மாற்றப்படாமல் உள்ளது. எங்களுக்கான அடிப்படை தேவைகளை கூட இந்த அரசு செய்து தருவதற்கு தயங்குகிறது. இதனால் எங்களது வாழ்வாதாரம் கடுமையாக பாதிப்படைகிறது.