சென்னை: வாக்காளர்கள் விவரங்கள் பாஜகவுக்கு எப்படி கிடைத்தது என ஆதார் ஆணையம் விசாரணை நடத்தி விளக்கம் தர சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல்களுக்கு மட்டும் பாஜக எஸ்எம்எஸ் அனுப்பியது எப்படி என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. பாஜகவின் நடவடிக்கை தீவிரமான மனித உரிமை மீறல், பாஜகவினர் வீடு வீடாக சென்று செல்போன் எண்களை சேகரித்ததாக கூறிய விளக்கத்தை ஏற்க ஐகோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது.