×

உங்களில் ஒருவனாக இருப்பேன்: மயிலை த.வேலு வாக்குறுதி

சென்னை: மயிலாப்பூர் தொகுதி திமுக வேட்பாளர் மயிலை த.வேலு வீடு, வீடாக சென்று மக்களை சந்தித்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குசேகரித்து வருகிறார். அதன்படி நேற்று காலை 7 மணிக்கு அப்பகுதிகளில் உள்ள முண்டகக்கன்னி அம்மன் கோயில் தெருக்களில் ஆட்டோவிலும், நடந்தும் சென்று பொதுமக்கள், கடை வைத்திருப்பவர்களை சந்தித்து வாக்குசேகரித்தார். அப்போது வீட்டு மாடியில் இருந்து பெண்கள் மற்றும் சிறுவர்கள் மலர் தூவி, பொன்னாடை போற்றி, உற்சாகமாக வரவேற்றனர். அப்போது, “திமுகவுக்குதான் எங்கள் வாக்கு, நிச்சியம் வெற்றி பெருவோம்,” என்று உறுதியளித்தனர். அதைத்தொடர்ந்து மக்களை வீடு வீடாக சந்தித்து, துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரித்தார்.

அப்போது, திமுக வேட்பாளர் மயிலை த.வேலு பேசியதாவது, “இந்த தொகுதியை பற்றி நன்கு அறிந்தவன். இந்த தொகுதிக்கும், மக்களுக்கும் என்ன தேவை என்பதை அறிந்தவன்.  திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நிச்சயமாக அடிப்படை வசதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். மேலும் நலிவடைந்துள்ள சலவை தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். உங்களில் ஒருவனாக இருப்பேன். சிறந்த தொகுதியாக மாற்றுவேன்,” என்று வாக்குறுதி அளித்தார்.

Tags : Peacock T. Velu , I will be one of you: Peacock T. Velu Promise
× RELATED மக்கள் பணியை சிறப்பாக செய்வேன்: மயிலை த.வேலு வாக்குறுதி