டெல்லி: இந்தியாவில் எந்தவொரு மாநிலத்திலும் கொரோனா தடுப்பூசிக்கு பற்றாக்குறை இல்லை என்று சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷன் தெரிவித்துள்ளார். மத்திய அரசு வழங்கும் தடுப்பூசிகளை சம்பந்தப்பட்ட மருத்துவமனைகளுக்கு உடனடியாக அனுப்ப வேண்டும். தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்ட விவரங்களை அரசின் இணையதளங்களில் பதிவிட வேண்டும் என்று தெரிவைக்கப்பட்டுள்ளது.