தி.மலை: திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதிக்குட்பட்ட பெரியகோளாப்பாடி கிராமத்தில் தபால் வாக்கை மாற்றி பதிவு செய்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். தபால் வாக்களிக்க தாயுடன் வந்த மனநலம் குன்றிய இளைஞரின் வாக்கை குறிப்பிட்ட கட்சிக்கு மாற்றி போட்ட தேர்தல் அலுவலக உதவியாளர் சரவணன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.