சென்னை: கொல்லம்- சென்னை விரைவு ரயில் வழக்கமான நேரத்துக்குப் பதில் ஏழரை மணி நேரம் தாமதமாகப் புறப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கொல்லத்தில் இருந்து பகல் 12 மணிக்குப் பதில் இரவு 7.30 மணிக்கு சென்னைக்குப் புறப்படும். மதுரை அருகே துலக்கப்பட்டியில் மின்னணு சிக்னல் அமைக்கும் பணி காரணமாக கொல்லம் ரயில் புறப்படும் நேரம் மாற்றப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.