×

மொசாம்பிக்கில் ஐஎஸ் தீவிரவாதிகள் வெறி வெளிநாட்டினர் 50 பேர் தலை துண்டித்து கொலை

மொசாம்பிக்: தென் ஆப்ரிக்க நாடான மொசாம்பிக்கில் உள்ளது பால்மா நகரம். இங்கு இயற்கை எரிவாயு வளம் கொட்டி கிடக்கிறது. இந்த நகரத்தில் நேற்று முன்தினம் பயங்கர ஆயுதங்கள் ஏந்திய நூற்றுக்கும் மேற்பட்ட ஐஎஸ் தீவிரவாதிகள் நுழைந்தனர். அப்போது, ஒரு ஓட்டலில் தங்கியிருந்த வெளிநாட்டினர் 17 வாகனங்களில் தங்கள் நாட்டுக்கு திரும்புவதற்காக சென்று கொண்டிருந்தனர். அவர்களை வழிமறித்த தீவிரவாதிகள், அவர்கள் மீது பயங்கரமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். பல வாகனங்கள் அங்கிருந்து தப்பிச் சென்றன. இதில் 50 பேர் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களின் சடலங்களை கைப்பற்றிய தீவிரவாதிகள், தலைகளை துண்டித்து சாலைகளில் வீசினர். இந்த கொடூர தாக்குதலுக்கு அவர்களின் கைகளில் சிக்கிய ராணுவ வீரர்கள், கிறிஸ்தவர்களையும் கொன்று குவித்ததாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.


Tags : IS ,Mozambique , IS militants have beheaded 50 foreigners in Mozambique
× RELATED இது உங்கள் ராம ராஜ்ஜியம்: ஆம் ஆத்மி இணையதளம் தொடக்கம்