×

ஆதம்பாக்கத்தில் தேர்தல் அலுவலகம்: தா.மோ.அன்பரசன் திறந்து வைத்தார்

ஆலந்தூர்: ஆலந்தூர் தொகுதி  திமுக தேர்தல்  அலுவலக திறப்பு விழா ஆதம்பாக்கத்தில் நடந்தது.  ஆலந்தூர் தெற்கு பகுதி திமுக செயலாளர் என்.சந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் எம்.எஸ்.கே. இப்ராகிம், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் ஜெயராம் மார்தான்டன், மதிமுக பகுதி செயலாளர் கத்திபாரா சின்னவன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்ட செயலாளர் கே.ஆர்.ஜெகதீஸ்வரன் வரவேற்றார். தேர்தல் அலுவலகத்தை ஆலந்தூர் தொகுதி திமுக  வேட்பாளர் தா.மோ.அன்பரசன் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், ரஜினி மக்கள் மன்றத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர். பின்னர் தா.மோ.அன்பரசன் பேசுகையில், ‘இந்த தேர்தலில் நாம்  வெற்றிபெற்றால்  தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும். மகளிர், மாணவர்கள், அடித்தட்டு மக்கள், விவசாயிகள், தொழில் முனைவோர் என அனைவரும் பயன்பெறும் வகையில் திமுகவின் தேர்தல் அறிக்கை உள்ளது.

எனவே, திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள திட்டங்களை மக்களிடம் எடுத்துக்கூறி வாக்கு சேகரியுங்கள்,’ என்றார். விழாவில் அவைத் தலைவர் நாகராஜசோழன், வட்ட செயலாளர்கள், ஜே.நடராஜன், வேலவன்,  மாவட்ட பிரதிநிதிகள் உலகநாதன், லியோ பிரபாகரன், ஜீ.ரமேஷ், சேது, செந்தில், சுதாகர், விஜய் பாபு, இளைஞரணி கதிரவன், மணிகண்டன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Adambakkam ,Thamo Anparasan , Election Office at Adambakkam: Thamo Anparasan opened
× RELATED துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு