×

சாலை பணி விரைந்து முடிக்கப்படும்: பிரபாகர் ராஜா வாக்குறுதி

சென்னை: விருகம்பாக்கம் தொகுதி திமுக வேட்பாளர் ஏ.எம்.வி.பிரபாகர் ராஜாவை ஆதரித்து திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்பி பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர், ‘திமுக ஆட்சிக்கு வந்தவுடன் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்படும்,’ என்றார். பிரசாரத்தின் போது தலைமை செயற்குழு உறுப்பினர் க.தனசேகரன், பகுதி செயலாளர் மு.ராசா, தலைமை பொதுக்குழு உறுப்பினர் உ.துரைராஜ், எஸ்.டி.தங்கராஜ், மாவட்ட துணை செயலாளர் வாசுகி, மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் ரத்னா லோகேஷ், வட்ட செயலாளர்கள் பூக்கடை பழனிச்சாமி, செழியன், செந்தில், பி.கே.குமார், அன்பழகன் மற்றும் கூட்டணி கட்சியினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து வேட்பாளர் பிரபாகர்ராஜா, 137வது வட்டம் சூளை பள்ளம், புகழேந்தி தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீடு, வீடாக சென்று மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். அப்போது அவர், ‘எம்ஜிஆர் நகர் அண்ணா நெடுஞ்சாலை பணியை விரைந்து முடித்து தரமான சாலை அமைக்கப்படும். கழிவுநீர் தேங்குவதை தடுக்க கால்வாய் அமைக்கப்படும். சட்டமன்ற அலுவலகம் 24 மணி நேரம் செயல்படும். மக்கள் எந்த நேரத்திலும் தங்களது குறைகளை தெரிவிக்கலாம். அது மட்டுமல்லாமல் பிரச்னைகளை தீர்க்க தெருக்கள் தோறும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். மழைக்காலங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படும்,’ என்றார்.

Tags : Prabhakar Raja , Road work to be completed soon: Prabhakar Raja promises
× RELATED அடையாறு ஆற்றில் தடுப்புச்சுவர்: பிரபாகர் ராஜா வாக்குறுதி