சென்னை: ஆவடி அருகே கவரைப்பாளையம் கங்கையம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம்(60). துணி வியாபாரி. இவரின் மனைவி மீனா(54). வீட்டு வேலை செய்கிறார். இந்நிலையில், தம்பதி, நேற்று முன்தினம் காலை வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றனர். மாலையில், மீனா திரும்பியபோது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததால் அதிர்ச்சியடைந்தார். அவர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 20 ஆயிரம் கொள்ளைப்போனது தெரிந்தது. இதேபோல், ஆவடி கவரைப்பாளையம் நாகவள்ளியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ஏழுமலை(58). கூழ் வியாபாரி. இவரின் மனைவி பிரேமா. கட்டிடத்தொழிலாளி. இவர்களது 2 மகன்களும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றிவருகின்றனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்று விட்டனர். மாலையில் பிரேமா, வீட்டுக்கு வந்தபோது முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததைப்பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பீரோவில் இருந்த 80 ஆயிரம் கொள்ளைப்போனது தெரியவந்தது.