×

வழக்கறிஞர் கொலை வழக்கில் நீதிமன்றத்தில் 3 பேர் சரண்

துரைப்பாக்கம்: பெருங்குடி வழக்கறிஞர் கொலை வழக்கு தொடர்பாக, விழுப்புரம் நீதிமன்றத்தில் 3 பேர் சரணடைந்தனர். பெருங்குடி ராஜு நகர் பகுதியை சேர்ந்தவர் ஜெய்கணேஷ் (33). இவர், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருந்தார். நேற்று முன்தினம் இரவு வீட்டு வாசலில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் ஜெய்கணேஷை சரமாரியாக வெட்டிக் கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பினர். இதுகுறித்து துரைப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில், பிரபல ரவுடி ஒருவரின் நெருங்கிய நண்பரான ஜெய்கணேஷ், அவருடைய வழக்கறிஞராகவும் இருந்துள்ளார். ரவுடி வழக்கு தொடர்பாக விசுவாசம் காட்டுவதில் ஜெய்கணேசுக்கும், மற்றொரு வழக்கறிஞருக்கும் தொழில் போட்டி இருந்து வந்தது தெரியவந்தது.

இதனையடுத்து, போலீசார் ஜெய்கணேஷை தொழில் போட்டியில் கொலை செய்தனரா அல்லது வேறு ஏதாவது காரணமா என்ற கோணங்களில் வழக்குப்பதிவு செய்து 2 தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில், இந்த கொலை வழக்கு தொடர்பாக, விழுப்புரம் நீதித்துறை நடுவர் கோர்ட்டில் சென்னை நுங்கம்பாக்கத்தை சேர்ந்த முருகன் (26), ஸ்ரீதர் (27), பிரவீன் (23) ஆகிய 3 பேரும் நீதிபதி ராதிகா முன்பு நேற்று சரணடைந்தனர். துரைப்பாக்கம் போலீசார், அவர்கள் 3 பேரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.

The post வழக்கறிஞர் கொலை வழக்கில் நீதிமன்றத்தில் 3 பேர் சரண் appeared first on Dinakaran.

Tags : Saran ,Vilappuram ,Perungudi ,Karungudi Raju Nagar Area ,Dinakaran ,
× RELATED காந்தி நினைவிடம், அனுமன் கோயிலில்...