சென்னை: தேசிய மாநாட்டு கட்சியின் தலைவரும், ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதலமைச்சருமான திரு. பரூக் அப்துல்லா அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவரது மகன் உமர் அப்துல்லா அவர்கள் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.இச்செய்தியை அறிந்து வருத்தமுற்றேன். திரு. பரூக் அப்துல்லா அவர்கள் விரைந்து நலம்பெற விரும்புவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளர்