×

கேரள சிபிஎம் மாஜி எம்பி சர்ச்சை பேச்சு; ராகுல் பெண்கள் கல்லூரிக்கு மட்டும்தான் செல்வார்: தேர்தல் ஆணையத்தில் புகார் செய்ய காங்கிரஸ் முடிவு

திருவனந்தபுரம்: திருமணமாகாத ராகுல்காந்தி பெண்கள் கல்லூரிக்கு மட்டும்தான் செல்வார் என்று மார்க்சிஸ்ட் முன்னாள் எம்பி பொதுக்கூட்டத்தில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ேகரள மாநிலம் இடுக்கி மாவட்டம் உடும்பன்சோலை தொகுதியில் மார்க்சிஸ்ட் சார்பில் அமைச்சர் எம்.எம்.மணி போட்டியிடுகிறார். நேற்று தொகுதிக்கு உள்பட்ட இரட்டையார் பகுதியில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. இதில் மார்க்சிஸ்ட் முன்னாள் எம்பி ஜோய்ஸ் ஜார்ஜ் பேசியது:

‘ராகுல்காந்தி மகளிர் கல்லூரிகளுக்கு மட்டும்தான் செல்வார். அவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. எனவே மாணவிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அவரை நம்ப முடியாது. குழப்பக்காரர் என்றார். ஜோய்ஸ் ஜார்ஜின் இந்த பேச்சுக்கு மேடையில் இருந்தவர்கள் கைதட்டி மகிழ்ச்சி தெரிவித்தனர். ஆனால் முன்னாள் எம்பியின் இந்த பேச்சு ேகரளாவில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து இடுக்கி ெதாகுதி காங்கிரஸ் எம்பி டீன் குரியாகோஸ் கூறியது: ‘அவரவருக்கு இருக்கும் குணங்கள்தான் மற்றவர்களுக்கும் இருக்கும் என்று ஜோய்ஸ் ஜார்ஜ் கருதுகிறார்.

அவரது மனதில் ஆபாச எண்ணம் இருப்பதை வெளிப்படுத்தி உள்ளார். ராகுல்காந்தியை விமர்சிக்க ஜோய்ஸ் ஜார்ஜுக்கு என்ன அருகதை உள்ளது. அமைச்சர் எம்.எம்.மணியும் இதேபோல பல ஆபாச கருத்துக்களை கூறியுள்ளார். அவரை குஷிப்படுத்த ஜோய்ஸ் ஜார்ஜ் பேசியுள்ளார். இது குறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் செய்ய உள்ளோம்’ என்றார். ‘ஜோய்ஸ் ஜார்ஜின் பேச்சு குறித்து டிஜிபியிடம் புகார் செய்துள்ளோம்’ என்று இடுக்கி மாவட்ட காங்கிரஸ் தலைவர் இப்ராஹிம் குட்டி தெரிவித்துள்ளார்.

Tags : Kerala ,CPM ,Maji MB ,Rahul ,Electoral Commission , Kerala CPM ex-MP controversy speech; Rahul will only go to women's college: Congress decides to lodge complaint with Election Commission
× RELATED தமிழக – கேரள எல்லையோர கிராமங்களில்...