திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் கிராம மக்கள் தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக அறிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வெண்மனம் புதூர் அம்பேத்கர் நகரில் 150 குடும்பங்களுக்கு பட்டா வழங்கக் கோரி தேர்தலைப் புறக்கணிக்க மக்கள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பட்டா வழங்கினால் மட்டுமே வாக்களிப்பு, இல்லையேல் தேர்தல் புறக்கணிப்பு என கருப்புக் கொடியுடன் பேனர் வைக்கப்பட்டுள்ளது.