×

பாணாவரம் அருகே தண்ணீர் தேடி கிராமத்திற்குள் நுழைந்த மான் மீட்பு

பாணாவரம் : பாணாவரம் காப்புக் காட்டில் இருந்து தண்ணீர் தேடி வழிதவறி வந்த 2 மான்கள், அன்வர்திகான்பேட்டை கடைவீதியில் அங்கும், இங்கும் நேற்று காலை சுற்றிக்கொண்டு இருந்துள்ளன.இதனை பார்த்த அங்கிருந்த வியாபாரிகள், பொதுமக்கள் புள்ளி மான்களை பிடிக்க முயன்றனர். அதில், ஒரு மான் பிடிப்பட்டது, மற்றொரு மான் அங்கிருந்து தப்பி சென்றது.

இதையடுத்து, பாணாவரம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், வனக்காவலர் அன்பரசன் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்கள் பிடித்து வைத்திருந்த மானை மீட்டனர். தொடர்ந்து, பாணாவரம் காப்பு காட்டில் கொண்டு சென்று விட்டனர்.

Tags : Panavaram , Panavaram: Two deer strayed from the Panavaram reserve forest in search of water at Anvardikanpet shopping center
× RELATED பாணாவரம் அடுத்த மகேந்திரவாடி மலைக்கு...