×

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகள் அத்தனை பேரும் தண்டிக்கப்படுவார்கள்-தயாநிதிமாறன் எம்.பி. பேச்சு

பொள்ளாச்சி :  திமுக ஆட்சிக்கு வந்தவுடன் பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகள் அத்தனை பேரும் தண்டிக்கப்படுவார்கள் என தயாநிதி மாறன் எம்.பி. பேசினார்.  கோவை மாவட்டம் பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் டாக்டர் வரதராஜை ஆதரித்தது, முன்னாள் மத்திய அமைச்சரும், தற்போதைய எம்.பி.யுமான தயாநிதிமாறன் நேற்று நெகமத்தில் திறந்த ஜீப்பில் சென்றபடி வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:

பொள்ளாச்சி பாலியல் குற்றச்செயல், உலகையே அதிர்ச்சியடைய செய்துள்ளது. மத்திய அரசு, நீட் தேர்வு கொண்டு வந்ததால்,  தனது மருத்துவ கனவு நிறைவேறாமல் அனிதா என்ற சகோதரி இறந்தார். அனிதாவுக்கு நடந்த கொடுமையை கண்டு, திண்டுக்கல்லை சேர்ந்த ஆசிரியை சபரிமாலா தனது ஆசிரியர் பணியை ராஜினாமா செய்தார்.

அவர், பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிட்டு,  பொள்ளாச்சி ஜெயராமனுக்கு நல்ல பாடத்தை கற்பிக்க வேண்டும் என சுயேட்சையாக போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார். ஆனால், அவருக்கு ஆதரவாக செயல்பட்டவர்களை  மிரட்டி, அவரது மனுவை தள்ளுபடி செய்ய வைத்தார் பொள்ளாச்சி ஜெயராமன்.

திண்ணை பிரசாரம் செய்து, பொள்ளாச்சியில் நடந்த பாலியல் கொடுமையை பற்றி பேசியதால்,  சபரிமாலா மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஜனநாயக நாட்டில், அனைவருக்கும் பேச உரிமை உள்ளது.  விரைவில் திமுக ஆட்சி வரும், அப்போது இந்த பிரச்னைக்கு ஒரு முடிவு கட்டப்படும். தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தால், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையென்று எடப்பாடி பழனிசாமி ெசால்கிறார். ஏற்கனவே,  பொள்ளாச்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதை அவர் நினைத்துப்பார்க்க வேண்டும்.

இக்குற்றச்செயலில் யார் யாரெல்லாம் சிக்கியிருக்கிறார்கள் என்பதையும் அவர் திரும்பி பார்க்க வேண்டும். 2 மாதத்திறகு முன்பு, முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பாதுகாப்புக்கு சென்ற சிறப்பு டிஜிபி, அவர் வந்த  வாகனத்தில் இருந்த ஒரு பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். ஆனால், எடப்பாடியோ பெண்கள் பாதுகாப்பு பற்றி பேசுகிறார். எதை வேண்டுமானாலும் பேசலாம் மக்கள் நம்புவர் என்று நினைக்கிறார்.
குழந்தைபோல் தவழ்ந்து சென்று, சசிகலா காலில் விழுந்து, முதலமைச்சரானார் எடப்பாடி பழனிசாமி.  ஆனால், முதல் துரோகம் அவருக்கே செய்துவிட்டார்.

நீட் தேர்வு மூலம் தமிழக மக்களுக்கே துரோகம் செய்துவிட்டார்.  நமது உரிமை எல்லாவற்றையும் டெல்லியில் மோடியின் காலில் போட்டுவிட்டார். தமிழக மக்கள் நலனை புறம்தள்ளிவிட்டு, முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் என ஒவ்வொருவரும் போட்டிபோட்டு, மக்கள் பணத்தை கொள்ளையடித்துள்ளனர்.

பொள்ளாச்சி தொகுதியில், நம் தலைவர் மு.க.ஸ்டாலின் நிற்பதாக நினைத்து, திமுக வேட்பாளர் டாக்டர் வரதராஜனை வெற்றிபெற செய்யுங்கள். பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்த ஆட்சியாளர்களுக்கு சரியான பாடம் புகட்டும் வகையில் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து, வெற்றி பெற செய்யுங்கள்.இவ்வாறு தயாநிதி மாறன் எம்.பி. பேசினார்.

பிரசாரத்தில், கோவை தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ், நிர்வாகிகள் மு.க.முத்து, மருதவேல், துரை, கிரி கதிர்வேல், அமுதபாரதி, வக்கீல் அதிபதி, கார்த்திகேயன், லட்சுமி நாச்சிமுத்து, பாலசந்தர்,  நவநீதகிருஷ்ணன், கோட்டூர் தேவேந்திரன், பனப்பட்டி வேலுமணி, முன்னாள் எம்எல்ஏ சண்முகம், சக்கரவர்த்தி, சாந்திதேவி, பெண்கள் விடுதலை கட்சி நிறுவனர் சபரிமாலா, லட்சுமி ரவி  உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Pollachi ,DMK ,Dayanidhimaran , Pollachi: After the DMK came to power, all Pollachi sex offenders will be punished, said Dayanidhi Maran MP.
× RELATED பொள்ளாச்சியில் ஓய்வுபெற்ற பெண் கும்கி யானை உயிரிழப்பு..!!