தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தில் புதையல் எடுக்க குழிதோண்டிய விவகாரத்தில் தொடர்புடைய 2 பேர் தப்பியோடியுள்ளனர். பாளையங்கோட்டை அரசு மருத்துமனையில் இருந்து சிவமாலை, சிவபாலன் ஆகியோர் தப்பி ஓடினர். நாசரேத் திருவள்ளூர் காலனியில் முத்தையா என்பவர் வீட்டில் புதையல் இருப்பதாகக் கூறி குழிதோண்டியுள்ளனர்.