×

ஈழத்தில் நடந்த படுகொலை: தாராபுரம் வருகை தரும் பிரதமர் மோடிக்கு த.பெ.தி.க.வினர் எதிர்ப்பு

தாராபுரம்: தாராபுரம் வருகை தரும் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு பலூன்களை கட்டி விவசாயிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் கறுப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபட்ட த.பெ.தி.க.வினர் கைது செய்யப்பட்டுள்ளனர். த.பெ.தி.க பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் உள்பட 100க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர்.

2009ஆம் ஆண்டு ஈழத்தில் நடந்த படுகொலை தொடர்பாக மனித உரிமை மீறல் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் கொண்டுவந்த தீர்மானத்தில் இந்தியா வெளிநடப்பு செய்ததற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தந்தை பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்டோர் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். தமிழர்களுக்கு இழைத்த துரோகம் என்று அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். இந்த நிலையில் தமிழகத்தில் பிரச்சாரத்திற்காக வருகை தர உள்ள மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக GOBACKMODI என்ற கருப்புக்கொடியை ஏந்தியும், பல்வேறு விதமாக தமிழர்களுக்கு இழைத்திருக்கக்கூடிய துரோகங்களை பட்டியலிட்டும் தொடர்ந்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்தவர்களும், ஆதரவாளர்களும் ஒன்றுகூடி கறுப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடத்தி இருக்கிறார்கள்.

Tags : Iam ,PM Modi ,Darapura ,Q. Viner , Prime Minister Modi
× RELATED சொல்லிட்டாங்க…