×

கூடலூர் அருகே திமுகவில் இணைந்ததால் 4 பேருக்கு கத்திக்குத்து : அதிமுக பிரமுகர் வெறிச் செயல்!!


நீலகிரி : நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே திமுகவில் இணைந்த சிவலிங்கம் என்பவர் உள்ளிட்ட 4 பேருக்கு கத்திக்குத்து ஏற்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவலிங்கம் திமுகவில் இணைந்ததால் அவரது உறவினரும் அதிமுக பிரமுகருமான உதயகுமார் தட்டி கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியதால் உதயகுமார் கத்தியால் குத்தியதில் சிவலிங்கம் உள்ளிட்ட 4 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த கூடலூர் போலீசார் உதயகுமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அத்துடன் படுகாயமடைந்தவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags : Dimu ,Güdalur , ,பிரமுகர்
× RELATED போட்டியின்றி எம்.பி.ஆனார்...