×

ஏழுமலையானை தரிசிக்க இலவச டிக்கெட் பெற்ற பக்தர்களுக்கு கட்டுப்பாடு

திருமலை: திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக இலவச தரிசனத்தில் நேர ஒதுக்கீடு டிக்கெட் திருப்பதி அலிபிரியில் உள்ள பூதேவி காம்ப்ளக்ஸ் மற்றும் விஷ்ணு நிவாசம் பக்தர்கள் ஓய்வறையில் வழங்கப்படுகிறது. இந்த டிக்கெட்டுகளை பெற்ற பக்தர்கள் நேர ஒதுக்கீடு செய்யப்பட்ட நேரத்தில் இருந்து ஒரு நாளைக்கு முன்னதாக மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். தரிசன டிக்கெட்டுகளை பெற்று சாலை வழியாக திருமலைக்கு செல்ல பக்தர்கள் முந்தைய நாள் மதியம் 1 மணி முதல் அலிபிரி சோதனைச்சாவடியில் அனுமதிக்கப்படுவார்கள். இதேபோல், இலவச தரிசன  நேர ஒதுக்கீடு செய்யப்பட்ட டிக்கெட் மூலம் அலிபிரி மற்றும் ஸ்ரீவாரிமெட்டு மலைப்பாதையில் பாதயாத்திரை செல்ல முந்தைய நாள் காலை 9 மணி முதல் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

Tags : Ezhumalayana , Restriction for devotees who get free ticket to visit Ezhumalayana
× RELATED திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க போலி...