சென்னை: விருகம்பாக்கம் தொகுதி திமுக வேட்பாளர் ஏ.எம்.வி.பிரபாகர் ராஜா, கலைஞர் நகர் தெற்கு பகுதி 129 (அ) வட்டத்துக்குட்பட்ட பகுதிகளில் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தார். பொதுமக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது, அவர் பேசுகையில், ‘இந்த பகுதியில் கழிவுநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண கழிவுநீர் கால்வாய் அமைத்து கொடுப்பேன். 24 மணி நேரமும் விருகம்பாக்கம் சட்டமன்ற தொகுதி அலுவலகம் இயங்கும். மக்கள் எந்த நேரத்திலும் புகார் அளிக்கலாம். உங்களை தேடி உங்கள் நண்பன் என்ற பெயரில் தெருக்கள்தோறும் முகாம்கள் நடத்தி பிரச்னைகள் தீர்க்கப்படும். உயர்நிலை மின் கம்பங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். பருவமழை காலங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படும்,’ என்றார்.
பிரசாரத்தின் போது பகுதி செயலாளர் மு.ராசா, தலைமை பொதுக்குழு உறுப்பினர் உ.துரைராஜ், எஸ்.டி.தங்கராஜ், வட்ட செயலாளர் தஞ்சை பாபு, பழக்கடை பாஸ்கர், மைக்கேல், கோவிந்தராஜ், முத்துவேல், சண்முகம், ஸ்ரீதர், வாட்டர் விஜயலட்சுமி, விஜயகுமார், சதீஷ், பாஸ்கர், மணியன், சூர்யா, சிவகுமார், ரத்தினகுமார் மற்றும் கூட்டணி கட்சியினர் உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், பிரபாகர் ராஜாவுக்கு ஆதரவு தெரிவித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, அவர் பேசுகையில், ‘என்னை விட ஒரு வாக்கு வித்தியாசத்தில் பிரபாகர் ராஜாவை வெற்றி பெற செய்ய வேண்டும்,’ என்றார்.