×

கே.எஸ்.அழகிரி இறுதி கட்ட தேர்தல் பிரசாரம்: 3ம் தேதி நடக்கும் கூட்டத்தில் பிரியங்கா பங்கேற்பு: திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார்

சென்னை: திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தமிழகம் முழுவதும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில், ராகுல்காந்தி நேற்று முன்தினம் சென்னை மற்றும் சேலத்தில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி கலந்து கொண்டார். அவரது தமிழக வருகையை தொடர்ந்து கே.எஸ்.அழகிரியின் பிரசார சுற்றுப்பயண தேதிகள் மாற்றப்பட்டுள்ளது.

இதுகுறித்து, தமிழக காங்கிரஸ் கட்சியின் ஊடகத் துறை தலைவர் கோபண்ணா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வரும் 30ம்தேதி மாலை விருத்தாச்சலம் சட்டமன்ற தொகுதியிலும், 31ம்தேி மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதியிலும், ஏப்ரல் 1ம்தேதி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியிலும், மாலை  உடுமலைப்பேட்டை சட்டமன்ற தொகுதியிலும், 2ம்தேதி கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியிலும் பிரசாரம் செய்கிறார்.அதை தொடர்ந்து, 3ம்தேதி கன்னியாகுமரியில் அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா பங்கேற்கும் பிரசார சுற்றுப்பயணத்தில் கலந்து கொள்கிறார். 4ம்தேதி காலையில் தென்காசி சட்டமன்ற தொகுதியிலும், மாலை நாங்குநேரி சட்டமன்ற தொகுதியிலும் பிரசாரம் செய்கிறார்.

Tags : KS Alagiri ,Phase ,Priyanka ,DMK Alliance , KS Alagiri, Priyanka, DMK alliance
× RELATED 4ம் கட்ட தேர்தல் 96 தொகுதியில் மனு தாக்கல் துவக்கம்