×

பாஜவுக்கு தகுந்த பாடம் புகட்ட வேண்டும்: சவுகார்பேட்டையில் பிரகாஷ் காரத் பேச்சு

சென்னை: தண்டையார்பேட்டையில் உள்ள ஏழுகிணறு பகுதியில் திமுக வேட்பாளர் சேகர்பாபுவை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமை குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் தேர்தல் பிரசாரம் செய்தார். மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் துறைமுகம் தொகுதி திமுக வேட்பாளர் பி.கே.சேகர்பாபுவை ஆதரித்து மாபெரும் பொதுக்கூட்டம் சவுகார்பேட்டை ஏழுகிணறு பகுதியில் நேற்று காலை நடந்தது. இதில், சிறப்பு அழைப்பாளராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமை குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் கலந்து கொண்டு பேசியதாவது: ‘‘தமிழகத்தில் ஆளும் எடப்பாடி அரசு அடிமை அரசாக இருந்து வருகிறது. மோடி, அமித்ஷாவுக்கு அடிமையாக செயல்படுகின்றனர். ஏப்ரல் 6ம்தேதி நடைபெறும் தேர்தல் மிக முக்கியமானது. தமிழகத்தின் தலையெழுத்தை மாற்றக்கூடியது.

கடந்த ஒரு ஆண்டாக அதிமுக அரசின் செயல்பாடு எப்படி இருக்கிறது என உங்களுக்கு தெரியும். விவசாயிகளுக்கு எதிராக பாஜ கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் அதிமுக எம்பி ஒருவர் ஆதரவு அளித்தார். இந்த சட்டத்துக்கு மத்திய அரசு ஆர்எஸ்எஸ் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. மத மாற்றம், பசுவதை சட்டங்களை கொண்டு வந்து சிறுபாண்மை மக்களுக்கு எதிராக செயல்படுகின்றனர். தமிழகத்திலும் இந்துத்துவாவை கொண்டு வரும் பாஜவுக்கு தகுந்த பாடம் புகட்ட வேண்டும். இது திராவிட மண். இங்கு ஒருபோதும் பாஜ காலூண்ட முடியாது. இந்த தேர்தலில் துறைமுகம் தொகுதியில் போட்டியிடும் பாஜ வேட்பாளரை படுதோல்வி அடைய செய்து டெபாசிட் இழக்க வைக்கவேண்டும்.

Tags : BJP ,Prakash Karat ,Saugatuck , BJP
× RELATED தேர்தல் பணிமனையில் பாஜவினர் மோதல்: பாஜ...