சென்னை: தமிழகத்தில் பணப்பட்டுவாடாவை தடுக்க பறக்கும் படை உள்ளிட்ட பல்வேறு குழுக்கள் மூலம் வியூகங்கள் அமைத்து தேர்தல் ஆணையம் தடுத்து வருகிறது. தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலையொட்டி இதுவரை ரூ.324.27 கோடி பணம் பரிசு பொருட்களை தேர்தல் ஆணையம் கைப்பற்றியுள்ளது. தற்போது, வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழு, வீடியோ கண்காணிப்பு குழு, வீடியோ ஆய்வு குழு, கணக்கீட்டு குழுக்களை நியமித்துள்ளது. மாவட்ட வாரியமாக அமைக்கப்பட்டுள்ள குழுக்களின் எண்ணிக்கை விவரம்: