சென்னை: இஸ்லாமியர்களுக்கு பல நல்ல திட்டங்களை அதிமுக அரசு நிறைவேற்றியுள்ளது என சென்னை சேப்பாக்கம் தொகுதியில் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்து வருகிறார். சிறுபான்மை மக்கள் பாதுகாப்பாக வாழும் மாநிலம் தமிழ்நாடு தான் என கூறினார். இந்தியாவிலேயே சட்டம், ஒழுங்கை காக்கும் சிறந்த மாநிலம் தமிழ்நாடு; பெண்கள் வாழும் உகந்த நகரமாக சென்னை உள்ளது என பேசினார்.