கரூர்: கரூர் தொகுதியில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் ராஜேஷ் கண்ணன் அலுவலகம் மற்றும் நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாள் முதல் தமிழகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டுள்ள நிலையில், சுயேச்சை வேட்பாளர் ராஜேஷ் கண்ணனுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.