×

பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் அவரது மகன் மீது வழக்குப்பதிவு

பொள்ளாச்சி: துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் அவரது மகன் பிரவீன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பொள்ளாச்சி ஒக்கிலிபாளையத்தில் திமுக பிரச்சாரத்தின் போது இரு தரப்பினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பொள்ளாச்சி ஜெயராமன் தூண்டுதலின் பேரில் கார் ஏற்றி கொலை செய்வதாக பிரவீன் மிரட்டியதாக பார்த்தசாரதி புகார் அளித்துள்ளார். பொள்ளாச்சி ஜெயராமன், மகன் பிரவீன் உள்ளிட்ட 8 பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கொலை மிரட்டல், சட்டவிரோதமாக கூடுதல், தகாத வார்த்தையில் பேசுதல் உள்ளிட்ட பிரிவுகளில் 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tags : Pollachi Jayaraman , Pollachi Jayaraman
× RELATED நாடாளுமன்ற தேர்தல்: அதிமுக தேர்தல்...