சென்னை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை உயர்நீதிமன்றம் முடித்து வைத்தது. மிகப்பெரிய தேர்தல் நடத்தும் பணியில் அரிதான தவறை நீதிமன்ற அவமதிப்பாக கருத முடியாது என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு தபால் வாக்களிக்க உரிய அனுமதி வழங்கப்படுவதில்லை என நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.