×

ஒரு வருடம் ஆகியும் பாடாய்ப்படுத்தும் கொரோனா.. 2021ல் முதன்முறையாக ஒரே நாளில் 68,020 பேருக்கு பாதிப்பு.. 291 பேர் பலி!!

டெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1.61 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 1.20 கோடியை  தாண்டியது. இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

* புதிதாக 68,020 பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,20,39,644 ஆக உயர்ந்தது.

* புதிதாக 291 பேர் இறந்துள்ளனர். இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,61,843 ஆக உயர்ந்தது.

* தொற்றில் இருந்து ஒரே நாளில் 32,231 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,13,55,993 ஆக உயர்ந்துள்ளது.

* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட  5,21,808 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

* குணமடைந்தோர் விகிதம் 94.32% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.34% ஆக அதிகரித்துள்ளது.

* சிகிச்சை பெறுவோர் விகிதம் 4.33% ஆக அதிகரித்துள்ளது.

* இதுவரை இந்தியாவில்  6,05,30,435 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.


Tags : Corona , Corona, virus, infection, world, people
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...