×

கொரோனாவை பயன்படுத்தி மாஸ்க் முதல் மயானம் வரை ஊழல்: மமக தலைவர் ஜவாஹிருல்லா பேச்சு

சேலம் பொதுக்கூட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா பேசியதாவது: அதிமுகவை பாஜ தான் இயக்குகிறது. தமிழகத்தை பாஜ தான் ஆட்சி செய்கிறது. தன்னை விவசாயி என கூறிக்கொள்ளும் முதல்வர், 8 வழிச்சாலை முதல் கெயில் வரை மக்களுக்கு எதிரான திட்டங்களை நிறைவேற்ற முனைப்பு காட்டி வருகிறார். சமூக நீதியை குழி தோண்டி புதைத்து விட்டனர். கொரோனா சமயத்தில் மாஸ்க் முதல் மயானம் வரை ஊழல் செய்த கட்சி அதிமுக. காவிரி படுகையை, வேளாண் பாதுகாப்பு மண்டலமாக அறிவித்து சட்டம் இயற்றப்பட்டது.

ஆனால், மத்திய அரசு இதனை கண்டுகொள்ளாமல் ஹைட்ேரா கார்பன், மீத்தேன் எடுக்க திட்டமிடுகிறது. 3 வேளாண் சட்டங்களை நிறைவேற்ற ஆதரவு அளித்து, மாநில சுயாட்சியை அதிமுக அரசு பறிகொடுத்தது. தமிழக முதல்வர் அச்சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றாமல், எந்தவித பாதிப்பும் இல்லை என பச்சை பொய் பேசுகிறார். இவ்வாறு ஜவாஹிருல்லா பேசினார்.

Tags : Corruption using the corona to mask the first: Mamaka leader Jawaharlal Nehru's speech
× RELATED பீகாரில் இந்தியா கூட்டணி கட்சிகள் இடையே தொகுதி பங்கீட்டில் உடன்பாடு