×

பர்வதமலை ஏறிய சென்னை பக்தர்கள் 2 பேர் பலி

கலசபாக்கம்: திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் பகுதியில் 4,560 அடி உயர பர்வதமலை மீதுள்ள மல்லிகார்ஜூனேஸ்வரர் கோயிலுக்கு பவுர்ணமியையொட்டி நேற்று முன்தினம் சென்னை திருமுல்லைவாயல் பகுதியை சேர்ந்த மாசிலாமணி மகன் திலீப்குமார்(19) என்ற கல்லூரி மாணவர், நண்பர்கள் 9 பேருடன் வந்தார். நேற்று அதிகாலை 3 மணியளவில் மலையில் ஏறி, சுவாமி தரிசனம் செய்துவிட்டு காலை 8 மணியளவில் கீழே இறங்கினர்.

அண்ணாமலையார் பாதம் அருகே திலீப்குமாருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தார். நண்பர்களின் தகவலின்படி கடலாடி போலீசார் மற்றும் டாக்டர்கள் விரைந்து சென்று பரிசோதனை செய்தனர். அதில், அவர் இறந்தது தெரியவந்தது. அங்குள்ள பாதி மண்டபம் அருகே சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்த துரைக்கண்ணு(75) என்பவரும் இறந்து கிடந்தார். 2 சடலங்களையும் போலீசார் டோலி கட்டி கீழே கொண்டு வந்தனர்.


Tags : Chennai ,Parvathamalai , 2 Chennai pilgrims killed while climbing Parvathamalai
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...