சேலம் பொதுக்கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் பேசியதாவது: மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி மகத்தான வெற்றிபெறும் என அனைத்து கருத்துக்கணிப்புகளும் கூறுகிறது. நாம் கருத்துக்கணிப்புகளை நம்பி இல்லை. இங்குள்ள மக்களையும், கட்சி தலைவர்களையும் நம்பி இருக்கிறோம். நாட்டு மக்களுக்கு மோடி ஆட்சி தொடர்ச்சியாக துரோகம் செய்து வருகிறது. விவசாயிகளுக்கு எதிராக, தொழிலாளர்களுக்கு எதிராக, மாணவர்களுக்கு எதிராக நீட் நுழைவு தேர்வு என்று இப்படி ஏராளமான துரோக சட்டங்களை மோடி அரசு கொண்டு வந்திருக்கிறது.
மோடி அரசு செய்யும் துரோகத்திற்கு ஆதரவாக இங்குள்ள எடப்பாடி அரசு துணை போய்க்கொண்டிருக்கிறது. பாஜ, அதிமுக என்ற துரோக கூட்டணியை அமைத்துக்கொண்டு கறை படிந்த கையோடு வாக்கு கேட்டு வருகின்றனர். மோடி அரசு, எடப்பாடி அரசு கைகோர்த்து வரும் துரோக அணிக்கு சரியான பாடத்தை நீங்கள் கற்றுக்கொடுக்கவேண்டும். பாஜ போட்டியிடும் 20 தொகுதிகளிலும் அவர்களை டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும்.இவ்வாறு முத்தரசன் பேசினார்.