×

திரிசூலம் பகுதியில் சுரங்கப்பாதை: இ.கருணாநிதி வாக்குறுதி

தாம்பரம்: பல்லாவரம் தொகுதி திமுக வேட்பாளர் இ.கருணாநிதி நேற்று திரிசூலம் பகுதியில் பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். அப்போது, அவர் பேசுகையில், ‘‘திரிசூலம் பகுதி மக்களின் குடிநீர் பிரச்னையை தீர்க்க, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையங்கள், நீர்த்தேக்க தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக சாலை வசதிகள் இல்லாத இடத்தில் சாலைகள் மற்றும் மழைநீர் கால்வாய்கள் அமைத்து தரப்பட்டுள்ளது. இதில், குறிப்பாக திரிசூலம் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தை கடப்பதற்கு சுரங்கப்பாதை அமைத்து தர வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கையை நிறைவேற்ற பல வழிகளில் முயற்சித்தபோது, அதிமுக அரசு அதற்கு இடையூறாக இருந்தது.

எனவே, வரும் தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் எனக்கு வாக்களித்து வெற்றி பெறச்செய்தால் உடனடியாக திரிசூலம் பகுதியில் உள்ள எல்.சி.23 ரயில்வே கேட் இருக்கும் பகுதியில் பொதுமக்கள், ஆம்புலன்ஸ் மற்றும் வாகனங்கள் நீண்ட நேரம் காத்துக்கிடக்காமல் எளிதாக கடந்து செல்லும் வகையில் சுரங்கப்பாதை அமைத்து தர அனைத்து விதமான முயற்சிகளையும் எடுப்பேன். இதேபோல இப்பகுதியில் பல ஆண்டுகளாக மலை புறம்போக்கு இடத்தில் வசிப்பவர்களுக்கு பட்டா கிடைத்திட நடவடிக்கை எடுப்பேன்,’’ என அவர் வாக்குறுதியளித்தார். இந்த பிரசாரத்தில் தொகுதி பொறுப்பாளர் மீ.அ.வைத்திலிங்கம், புனித தோமையார் மலை வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் ஜெயக்குமார், கிளை செயலாளர் மாரிமுத்து உட்பட திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags : Trisulam ,E. Karunanidhi , Tunnel in the Trisulam area: E. Karunanidhi's promise
× RELATED பணிகள் முழுமையாக முடிந்து ராதாநகர்...