×

தொகுதி பிரச்னை தீர்ப்பதே முதல் பணி: மயிலை த.வேலு பிரசாரம்

சென்னை: மயிலாப்பூர் தொகுதி திமுக வேட்பாளர் மயிலை த.வேலு நேற்று காலை 7 மணிக்கு லைட் அவுஸ் அருகில் இருந்து சைக்கிளில் சென்று பிரசாரம் செய்தார். அவருக்கு ஆரத்தி எடுத்து மக்கள் உற்சாகமாக வரவேற்றனர். அதைத்தொடர்ந்து மக்களை வீடு வீடாக சந்தித்து, துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரித்தார். மேலும், 125வது வட்டத்தில் உள்ள அம்பேத்கர் பாலம், ஏகாம்பரம் பிள்ளை தெரு, மீனாம்பாள் பிள்ளைதெரு, ஆறுமுகம் பிள்ளை தெரு, நைனார் நாடார் தெரு, கைலாசபுரம், காரணீஸ்வரர் கோயில் தெரு, பி.வி. கோயில் தெரு, பாட்ஷா தோட்டம், நொச்சிக்குப்பம், நொச்சி நகர், மற்றும் மாலை 125வது (அ) வட்டத்தில் டும்மிகுப்பம், குயில் தோட்டம், ஜோசப் காலணி, மல்லிமாநகர், அப்பு தெரு, முத்துகிருஷ்ணன் தெரு, பஜார் தெரு, பரிபூரண விநாயகர் கோயில் தெரு, அருண்டேல் தெரு, போலீஸ் குடியிருப்பு, தபால் ஊழியர் குடியிருப்பு, மத்தள நாராயணன் தெரு, மாங்கொல்லை நடுத்தெரு, சாலை தெரு ஆகிய பகுதிகளில் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது, பொதுமக்கள் அவருக்கு மாலை அணிவித்து, பொன்னாடை போர்த்தி, ஆரத்தி எடுத்து வாழ்த்து தெரிவித்தனர். மேலும், அப்பகுதியில் உள்ள பொதுமக்கள், “நீங்கள் எங்கள் வீட்டு பிள்ளை, எங்களுடைய வாக்குகள் அனைத்தும் திமுகவிற்கே, திமுக வெற்றி பெறுவது உறுதி. இதுவே எங்கள் வாக்குறுதி,” என்று உறுதியளித்தனர். அப்போது, அவர், “உங்களுடைய குறைகளை உடனுக்குடன் தீர்த்து வைப்பேன். உங்களுக்கு எந்த பிரச்னையாக இருந்தாலும் உடனுக்குடன் தீர்த்து வைப்பதே என்னுடைய முதல் பணியாக இருக்கும்,” என்று வாக்குறுதி அளித்தார்.

Tags : Mayilai T.Velu , The first task is to solve the block problem: Mayilai T.Velu campaign
× RELATED ஒதுக்கப்பட்ட வீடுகள் இதுவரை ...