×

பீர்க்கன்கரனை பகுதியில் டி.கே.எம்.சின்னையா பிரசாரம்

சென்னை: தாம்பரம் தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் முன்னாள் அமைச்சர் டி.கே.எம்.சின்னையா பீர்க்கன்கரனை பகுதியில் உள்ள 15 வார்டுகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவரை ஆரத்தி எடுத்து பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது சின்னையா பேசுகையில், “எடப்பாடியால் தான் பீர்க்கன்கரனை ஏரி தூர்வாரப்பட்டு, சீரமைக்கப்பட்டது. இதேபோல், ஜி.எஸ்.டி.சாலை, பீர்க்கன்கரனை ரயில்வே மேம்பாலம் பணிகளுக்கான இணைப்பு சாலை அமைக்கப்பட்டு வருகிறது. அனைத்து சாலைகளும், தெருக்களும் தார்சாலையாக மாற்றப்பட்டுள்ளது. எடப்பாடி அரசு அமைந்தவுடன் அதிமுக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள, பள்ளி மாணவர்களுக்கு தினமும் பால், குடும்ப அட்டைதாரர்களுக்கு வாஷிங்மெஷின், ரேஷன் பொருட்கள் வீடுகளுக்கே நேரடியாக சென்று வழங்கப்படும்.

மகளிருக்கு பேருந்து கட்டணத்தில் 50 சதவீதம் கட்டணச்சலுகை. மாணவர்களின் கல்விக்கடன் தள்ளுபடி செய்யப்படும். கல்லூரி மாணவர்களுக்கு 2ஜி டேட்டா வழங்கப்படும். ஏழை, எளிய மக்களுக்கு வட்டியில்லா கடன் வழங்கப்படும். அமைப்பு சாரா ஓட்டுநர்களுக்கு விபத்து காப்பீடு வழங்கப்படும் உள்ளிட்ட அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும்,” என்றார். இதில் பீர்க்கன்கரனை பேரூராட்சி அதிமுக செயலாளர் சம்பத்குமார், முன்னாள் கவுன்சிலர் குணா, பாஜ செங்கல்பட்டு மாவட்ட பொறுப்பாளர் செம்பாக்கம் அ.வேதசுப்பிரமணியம், பேரூர் பாஜக தலைவர் ஆனந்தகுமார், சங்கரன், பாஷ்யம், சுபாஷ், பாமக விநாயகம் மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்துகொண்டனர்.

Tags : TKM ,Chinnaya ,Birkankaranai , TKM Chinnaya campaign in Birkankaranai area
× RELATED பெருங்களத்தூர் வணிக வளாகத்தில் உள்ள 27...